கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் கருத்தரங்கு

கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக கணினி சார்ந்த நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் விருந்தினர் விரிவுரை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் சின்னராசு மற்றும் கல்லூரி முதல்வர் மாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். CADD Technologies நிறுவனத்தின் மேலாளர் சண்முக பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாணவர்களுக்கு நெறிமுறைகள், நெறிமுறை சார்ந்த கணினி பயன்பாடு செயலாக்க பொறுப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.