கோஸ்கி சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

ஜவுளி நிறுவனமான கோஸ்கி, ஆர்.எஸ். புரத்தில் 7000 சதுர அடி பரப்பளவில் பிரத்தியேகமான மணப்பெண் மற்றும் விழா ஆடைகளை அமைத்துள்ளது. இதில், “சூப்பர் வுமன்” தீம் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

அணிவகுப்பை பிரபல ஆடை வடிவமைப்பாளர் கருண் ராமன் துவக்கிவைத்தார். மருத்துவர், சமையல் கலைஞர், சமூக ஆர்வலர், போட்டோகிராபர், ஆடை வடிவமைப்பாளர் என பல்வேறு துறையைச் சார்ந்த பத்து பெண்கள் நவீன உடைகளை அணிந்து ஓய்யாரமாக நடந்து வந்தனர்.

இதுகுறித்து எஸ்.பி.இ யுனிக் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகிகள் பிரதீப், பாலு, கணேஷ் ஆகியோர் தெரிவித்ததாவது: மணப்பெண்ணுக்கான ஆடைகள் முதல் திருமணத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கான ஆடைகள் வரை அனைத்தும் எங்களிடம் உள்ளன. நிச்சயதார்த்த ரேக்குகள், ஹல்தி, சங்கீத் உடைகள் மற்றும் அனைத்து வகை உடைகளும் எங்களிடம் உள்ளன.

“Fashion for EveryBODY” என்ற கருப்பொருளில் பிரத்யேக ஃபேஷன் ஷோவையும் கோஸ்கி வழங்குகிறது. இந்த நிகழ்வில், நட்சத்திர அணிவகுப்போடு, கோயம்புத்தூரைச் சேர்ந்த பல்வேறு துறையை சார்ந்த பத்து அசத்தல் பெண்கள், கோஸ்கியின் சமீபத்திய வடிவமைப்புகளைக் காண்பிக்கும் வகையில், அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இந்த ஃபேஷன் வாக்கின் நோக்கம் எளிமையானது: ஃபேஷன் மூலம் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த விரும்பும் எவருக்கும் அணுகக்கூடிய மலிவு விலையில் ஆனால், ஆடம்பரமான தோற்றதை உருவாக்க கூடியது. என்று கூறினர்.