3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைக்கான தேதிகள் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் சட்டசபையின் பதவி காலம் மார்ச் 12 ஆம் தேதியும், மேகாலயா மாநிலத்தின் பதவிக்காலம் மார்ச் 15 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தின் பதவிக்காலம் மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் தற்போது பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் 3 மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். மாநில அரசியல் கட்சியினர், சிவில் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தேர்தல் தேதி இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட உள்ளது.