தயிரில் உள்ள ஆபத்து

தயிர் எளிதில் செரிக்கக்கூடிய உணவு. ஆனால் சில உணவுகளுடன் இதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பலருக்கும் தெரியாது. அப்படி சேர்த்து சாப்பிடும்போது பலவித உடல் பிரச்னைகள் வருகின்றன. எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரியாணிக்கு வைக்கப்படும் ரைத்தா காம்பினேஷன் கூட தவறுதான் என்கின்றனர். ஏனெனில் தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. இந்த இரண்டு எதிர் தன்மைக் கொண்ட உணவு. இது ஒன்றாக இணைந்து சாப்பிடுவது உடலுக்கு கெடுதல்.

மாம்பழமும் வெங்காயத்தைப் போல் சூட்டை உண்டாக்கும் பொருள். இத்துடனும் தயிரை சேர்ப்பது கெடுதல்

பாலிருந்து தயிர் உருவானாலும் இரண்டையும் ஒன்று சேர சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிட்டால் அசிடிடி ஏற்படலாம்

மீன் , முட்டை இரண்டுமே அதிக புரதச்சத்து நிறைந்த உணவு. இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து சாப்பிடுவது தவறு. வயிற்று வலி என வயிறு உபாதைகள் உண்டாகும். அதேபோல் புரதச்சத்து மிக்க முட்டையுடனும் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது.

உளுந்தும் தயிரும் சேர்த்து சாப்பிடுவது செரிமானப் பிரச்னையை உண்டாக்கும். அதோடு வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்றவையும் உண்டாகும்.

எண்ணெயுடன் வறுத்த உணவு , பொறித்த உணவு போன்றவற்றை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தைக் பிரச்சனைகள் உண்டாக்கும்.

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

 

-பா. கோமதி தேவி