பொன்மாலையில் இனிதே நிறைவுற்ற ‘பி.எஸ்.ஜி காதம்பரி’

கோவை பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் ‘பி.எஸ்.ஜி காதம்பரி 2023’ இசை கச்சேரி நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் இசைக்கலைஞர் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனுக்கு ‘யுவ கலா ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை கலைமாமணி அரிமளம் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வழங்கினார்.

பின்னர், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி கல்லூரிகளின் முதல்வர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.