“எப்போ வருவாரோ” ஆறாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் ஆறாம் நாள் நிகழ்வு கோவை கிக்கானி பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் ஆறாம் நாள் அமர்வில் சுதா சேஷய்யன், கலந்து கொண்டு ஆதி சங்கரர் குறித்து சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.