இ.பி.எஸ் தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது – எஸ்.பி.வேலுமணி

திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: 2 வருட ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருகிறது திமுக. மக்களுக்கு ஏதும் செய்யாத அரசாக இந்த அரசு உள்ளது என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லி பல்வேறு நாடகங்களை திமுக அரங்கேற்றியது.

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கொடுக்கப்பட்டது. எதிர்கட்சியாக திமுக இருக்கும் போது ஊர் முழுவதும் பெட்டி எடுத்து சென்று மனு வாங்கினார் ஸ்டாலின். அந்த மனுவெல்லாம் என்னாச்சு என்று தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார். கோவையில் உள்ள அனைத்து அலுவலகத்திலும் திமுகவினர் பணம் வசூலிக்கின்றனர். அரசு ஊழியர்கள் கூட திமுக அரசை வெறுக்கின்றனர். ஓட்டு போடுகிற மின்னணு இயந்திரத்தில் தில்லு, முல்லு செய்துதான் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடத்தில் திமுக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி கட்சிகள், திமுக அரசுக்கு எதிராக ஏதுவும் பேசமால் அடிமையாகி இருக்கிறது. ஆனால் நாங்கள் யாருக்கும் அடிமையில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றி அதிமுகவுக்கு தான் அதுவும், சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலோடு வந்தாலும் அதிமுகவுக்கு தான் முழு வெற்றி என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: பாமகவின் கூட்டணி தொடர்பான குற்றசாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிப்பார். யாரையும் துன்பறுத்தி பேச வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

அதிமுக பிளவுபட்டு விட்டது என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி அதிமுக தான்.

தைரியமாக இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும் நாங்களும் தனித்து நிற்கிறோம். யார் வெற்றி பெறுவோம் என்று பார்கலாம். எங்களுக்கு இணையாண கட்சி ஏதுமில்லை. கூட்டணி கட்சியை எப்போதும் அதிமுக அனுசரித்தே செல்லும். அதை நாடாளுமன்ற தேர்தலில் பார்ப்பீர்கள் என தெரிவித்தார்.