அவினாசிலிங்கம் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் நாட்டு நலப்பணித்திட்ட குழு, செஞ்சுருள் சங்க குழு மற்றும் துளிர் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வினை நடத்தியது.

நிகழ்வில் மனையியல் புல முதன்மையர் வாசுகி பேசுகையில்: சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலையில் வாகனங்களை ஓட்டும் நெறிமுறைகள் குறித்தும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை குறித்து எடுத்துரைத்தார்.

கோயம்புத்தூர் துளிர் அறக்கட்டளை நிறுவனத்தின் பொருளாளர் வைத்தீஸ்வரன் சாலை விதிகள் குறித்த உறுதி மொழியினை மாணவிகள் ஏற்க, எடுத்துரைத்தனர்.

மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய நாடகம் மாணவிகளால் அரங்கேற்றப்பட்டதோடு அதன் தொடர்பாக பேச்சுப் போட்டி, கோலப்போட்டி, சுவரொட்டி தயாரித்தல், கோசம் எழுதுதல் போன்ற பல போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டு அனைவரின் கையெழுத்துக்களும் அதில் பதிவிடப்பட்டன.