மழைநீர் வடிகால்: திட்ட மதிப்பீடு தயாரிக்க மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12-க்குட்பட்ட மணியகாரன்பாளையம், அத்திபாளையம் சாலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கு உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் உத்தமன், நாசர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.