பார்க் கல்லூரியில் செய்தி வாசிப்பாளர் பயிற்சி மையம் துவக்கம்

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழும கல்லூரியில் செய்தி வாசிப்பாளர்களுக்கான பயிற்சிக் மையத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரபுதாசன் முன்னிலை வகித்தார். பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் ரவி சிறப்புரையாற்றினார்.

முதன்மைச் செயல் அலுவலர் அனுஷா ரவி பேசுகையில்: அனைத்துத் துறையின் பயிற்சி கல்லூரிகளை கோவையில் துவங்கி இந்த மாவட்டத்தை கல்விக்கான இலக்காக ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிருபர், சப் எடிட்டிங், கைபேசி ஜர்னலிசம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஒப்பனைக்கான பயிற்சி கல்லூரியை கோவையில் துவங்கியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டை தெரிவித்தார்.