தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுகலை மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு மத்திய பட்டு வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியத்தின் மூன்று பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தனர்.

பல்கலையின் பதிவாளர் தமிழ்வேந்தன், பெங்களூரு மத்திய பட்டு வாரியத்தின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலாளர் ஸ்ரீனிவாசா ஆகியோர் துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.