கோவையில் வரும் 30 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வரும் 30 ஆம் தேதி நேரடியாக நடத்தப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தரைத் தள கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும், விவசாயிகள் இதில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அறியுறுத்தப்பட்டுள்ளது.