எஸ்.பி.ஐ சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியினை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கோவை மண்டல மேலாளர் இன்பரசு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதில் சிறப்பு பேச்சாளர் ஈரோடு மகேஷ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் முதன்மை மேலாளர் முத்துக்குமார், தியா ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம், ஆருத்ராஸ் டெவலப்பர்ஸ் நிர்வாக பங்குதாரர் ரவி, கிரீன்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், நிர்வாக இயக்குனர் ராஜன், எம்.ஆர்.கே.டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், வி.ஜி.விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா கலந்து கொண்டனர்.