இந்திய போர் விமானியான முதல் பெண்..!

சாதனை படைத்த சானியா மிர்சா

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்திய விமான படையின் விமானியாவது இதுவே முதல்முறை.

உத்தர பிரதேச சேர்ந்த டிவி மெக்கானிக்கின் மகள் சானியா மிர்சா, இந்திய விமானப்படையில் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண.

மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனை சேர்த்து பெருமை சேர்த்துள்ளார்.

இந்தி வழி படித்த அவர், விமானியாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் பேசுகையில், “ஹிந்தி மீடியம் படிக்கும் மாணவர்களும் உறுதியுடன் இருந்தால் வெற்றி பெறலாம். புனே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் டிசம்பர் 27 ஆம் தேதி அவர் இணைகிறார்.

எனது பெற்றோரும், செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியும்தான் என்னுடை வெற்றிக்கு காரணம்.

தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில் போர் விமானிகளில் பெண்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முயற்சியில் என்னால் சீட்டை பெற முடியவில்லை. ஆனால் எனது இரண்டாவது முயற்சியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது” என்றார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில், ஆண் மற்றும் பெண் உட்பட மொத்தம் 400 இடங்கள் இருந்தன. பெண்களுக்கு மொத்தமாக 19 இடங்களும், அதில் போர் விமானி பிரவில் இரண்டு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு இடங்களில், சானியா தனது திறமையின் மூலம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.