ஸ்ரீ இராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவி வரவேற்புரை வழங்கினார்.

எஸ்.என்.ஆர் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் இவ்விழாவிற்கு தலைமையேற்று கலைநிகழ்ச்சிகள் மாணாக்கர்களுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வாழ்வியல் நெறிமுறைகளோடு நேர்மறை எண்ணங்களை மாணவர்கள் உள்ளங்களில் விதைப்பதை எடுத்துக் கூறினார்.

புதுச்சேரி அன்னைத்தெரசா மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்விசாரா பிற நடவடிக்கைகள் மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் மாணவர்கள் தங்களது திறமைகளை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு தங்களது துறைகளில் முன்னேற உதவுவது குறித்தும் கூறினார்.

இவ்விழாவில் கடந்த மூன்று கல்வி ஆண்டுகளில் ஆண்டு வாரியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற இளங்கலை மற்றும் முதுநிலை மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.