கே.பி.ஆர் கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “பிளாக்செயின் தொழில்நுட்பம்” எனும் தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர பாலுசாமி தலைமையுரை வழங்கினார்.

ஆலோசகரும் செயலாளருமான ராமச்சந்திரன், வணிகவியல் துறை முதன்மையர் குமுதாதேவி வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பிளாக்செயின் ஆலோசகர், பயிற்சியாளர் மஞ்சரி ஆனந்தன் கலந்து கொண்டு, தற்போதைய தொழில்நுட்பக் கருத்துகள் பற்றிய நுண்ணறிவுகள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருத்துகளின் முக்கிய தகவல்களை வழங்கினார்.