ஐயப்பா சேவா சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அன்னதானம்

ஸ்ரீ அகில பாரத ஐயப்பபா சேவா சங்கம் சாய்பாபாகாலனி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மகா அன்னதானம் நடைபெற்றது.

இந்த சங்கத்தின் சாய்பாபாகாலனி கிளை துவங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு மகா அன்னதான நிகழ்ச்சி சாய்பாபாகாலனியில் உள்ள நாகசாய் மந்திர், சாய்தீப் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக மகா கணபதி ஹோமம், சுவாமி ஐயப்பன் பஜனையுடன், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் துவக்கி வைத்தார். அன்னதான விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.