எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங் அரங்கில் ஞாயற்றுக்கிழமை அன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் மமங் தய் கலந்துகொண்டார். மேலும், கவிஞர் போகன் சங்கர், எழுத்தாளர்கள் காளிப்ரஸாத், ஜெயமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, எழுத்தாளர் ஆராது இயக்கிய விருது பெற்ற “தி அவுட்சைடர்” பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது மற்றும் அவரது படைப்புகள் பற்றிய அவரது சக தோழர்களின் கட்டுரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது.