கே.பி.ஆர் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல்துறை சார்பாக “இயந்திரங்களின் நுட்பம் அறிதல்“ எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பாலுசாமி, செயலர் மற்றும் ஆலோசகர் ராமசந்திரன் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினர். கணினி அறிவியல் துறை டீன், ஷர்மிளா வாழ்த்துரையும், உதவிப்பேராசிரியர் ரமேஷ் வரவேற்புரையும் வழங்கினர்.

கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரியின், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறை தலைவர் தேவிப்ரியா இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இயந்திர கற்றல் மற்றும் அதன் வகைகளை விளக்கினார். பங்குச்சந்தையில் மென்பொருளின் பங்களிப்பையும், தரவு மற்றும் தகவல்கள் பரிமாற்றத்திற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

இதில் கணினி அறிவியல் துறை மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர்.