பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் – மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களவை ஒப்புதலைத் தொடர்ந்து மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும்

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.