‘லத்தி’ திரைபடத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

கோவை நவ இந்திய பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை கல்லூரியில் விஷால் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாக உள்ள ‘லத்தி’ திரைபடத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஷால் பேசியதாவது: முதல்முறையாக கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்துள்ளேன். விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை. பிரச்சனையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும்.

உதயநிதி சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். பல வருடங்களுக்கு பின்பு தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என தெரிவித்துள்ளார். உதயநிதியை அமைச்சராகியது மகிழ்ச்சி.

ஓ .டி. டி., சின்ன படங்களை தான் வாங்குகிறார்கள். டிஜிட்டல் படங்கள் வரும் என கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்து விட்டார். சிறிய முதலீடை வைத்து படம் எடுப்பதை தவிர்க்கலாம். சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தான் நாங்கள் முயற்சி செய்வோம். ஓ டி டி பிளாட்பார்ம் ஆல் சினிமா துறைக்கு பாதிப்பு வந்துள்ளது.

சினிமாத்துறைக்கு ஜிஎஸ்டி விதித்தது மிக அதிகம். சூதாட்டத்தையும் சினிமா துறையும் ஒரே இலக்காவில் வைத்துள்ளனர். இலங்கை முகாமில் ப்ரொஜெக்டர் வைத்து இந்தப் படத்தை காட்ட கோரிக்கை வைப்பேன். அவர்களுக்கு திரையிட்டு காட்டுவதில் என்ன தவறு உள்ளது.

இரண்டரை மணி நேரத்தில் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது. இரண்டரை மணி நேரத்தில் பிரச்சினையை தான் சொல்ல முடியும் தீர்வு சொல்ல முடியாது. திருமணம் குறித்த கேள்விக்கு கட்டிடத்திற்கு பின் என்றார்.