புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் கோயம்புத்தூர் மாரத்தான்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து மாரத்தான் போட்டியை நடத்தியது.

கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே துவங்கிய இந்நிகழ்வை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து டிஜிபி மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார்.

இதில் 20கிலோ மீட்டர், 10கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.