கோவையில் கிறிஸ்துமஸ் திருவிழா துவக்கம்

ரஷ் ரிபப்ளிக் சார்பில் ஏற்பாடு செய்துள்ள சான்டாஸ் சோஷியலின் 5 வது பதிப்பு நவஇந்தியா அருகே உள்ள அலெக்சாண்டர் ஈக்வெஸ்ட்ரியன் கிளப்பில் இன்று துவங்கியது.

சான்டாஸ் சோஷியல் என்பது கோவை நகரின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழாவாகும். இன்று மற்றும் நாளை நடைபெறும் கிறிஸ்துமஸ் திருவிழாவை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில் 80 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. ஷாப்பிங்,உணவு, பொழுதுபோக்கு என அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது.

உணவுப் பிரியர்களுக்கு, பலவகையான உணவு வகைகள், பிரியாணி முதல் சுஷி வரை நீங்கள் தேர்வு செய்யலாம். பார்பிக்யூக்கள், ரோல்கள், கிறிஸ்துமஸ்-ஒய் கேக்குகள் மற்றும் குக்கீகள் என அனைத்தையும் இங்கு கிடைக்கும்.

மேலும் உணவுகளை நீங்கள் வாங்கும் முன் அதனை சுவைத்து பார்த்து வாங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்களும் NH47 லைவ் பேண்ட் & ஹை ஆன் ஆக்டேவ்ஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். கேளிக்கைகள் கலை, கைவினைப் பட்டறைகள், நெயில் ஆர்ட், முக ஓவியம், விளையாட்டுகள் இங்கு இடம் பெற்றுள்ளன.