தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு சச்சிதானந்த பள்ளி தேர்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, சிபிஎஸ்சி தெற்கு மண்டலம்-1 அளவில் நடைபெற்ற ஹாக்கி, டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியினைப் பெற்றுள்ளது.


இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் ஹாக்கி, டென்னிஸ் மற்றும் நீச்சல் விளையாட்டு அணியினரையும் அவர்களைத் தயார்ப்படுத்திய பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அனதா, மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் யோகானந்த், கார்த்திக், பிரசாத், வெள்ளிங்கிரி ஆகியோரையும் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி வாழ்த்தினார். பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.