– முதலமைச்சர் ஸ்டாலின்
தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் முதலமைச்சர் பேசியதாவது: ஆட்சிக்கு வந்து 19 மாதங்களில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம்.
ஒவ்வொருவருடைய தேவையையும், ஒவ்வொருவரின் பிரச்சினையையும் அறிந்து நமது அரசு செயல்படுகிறது.
தமிழக மக்கள் இருண்ட காலத்தில் இருந்து உதயசூரியன் காலத்திற்கு வந்துவிட்டனர். இந்தியாவில் தமிழகம் முதலிடம் வரவேண்டும் என்பதே எனது லட்சியம், எனது குறிக்கோள். அனைத்து துறைகளிலும் தமிழகம் உயர்ந்து வருகிறது. இதனை மக்கள் மனதில் நான் கண்டுகொண்டிருக்கிறேன் எனக் கூறினார்.