குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி?

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5 இல் தேர்தல் நடைபெற்றது. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.

குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத், இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத், இமாச்சலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகின்றது.

பிற்பகலுக்குள் இரு மாநிலங்களிலும் யார் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போகிறார் என்பது தெரியவரும். தற்போதைய நிலவரப்படி, குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் வகையில் 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் பாஜக அமைவது உறுதியாகியுள்ள நிலையில், தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.