எஸ்.என்.எம்.வி கல்லூரியில் உலக சாதனை தொடர் நிகழ்வு

எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கவிதை இலக்கிய மன்றம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், சிந்தனைச் சிறகுகள் நாகை சங்கமம், திருவள்ளுவர் உலக சாதனை, மனிதம் விதைப்போம் போன்ற அமைப்புகள் இணைந்து உலக சாதனை தொடர் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வரும் கவிதை மன்றத் தலைவருமான சுப்பிரமணி தலைமையுரை ஆற்றினார். ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸின் நிறுவனர் வெங்கடேசன் சிறப்புரை வழங்கினார். நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதனையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலர் ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் தீபக், சிவசக்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.