நாசா வெளியிட்ட ஆர்டெமிஸ் 1 புகைப்படம்

பிரமிப்பில் விஞ்ஞானிகள்..

பூமியிலிருந்து ஓரியன் விண்கலம் அதிக தூரம் மேற்கொண்டுள்ளது ,மேலும் இது குறித்து ஆர்டெமிஸ் 1 எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​ கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகம் 39B யிலிருந்து நிலவை நோக்கிய பயணத்தை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கியது.

ஆர்ட்டெமிஸ் 1 என்பது ஓரியன் விண்கலத்தில் மனிதர்கள் இல்லாத விமான சோதனையாக மேற்கொள்ளப்பட்டது.

2025-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி மையமான நாசா திட்டமிட்டு வந்தது. 3 முறை ஒத்திவைக்கப்பட்ட திட்டமானது, நவம்பர் 16ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டது .

இது மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

நாசா வெளியிட்ட புகைப்படத்தில் பூமி மற்றும் சந்திரன் இரண்டையும் பின்னணியில் தெரியும் வகையில் அமைந்திருந்தது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் அப்பல்லோ மற்றும் வாயேஜர் 1 இன் “பேல் ப்ளூ டாட்” எடுத்த புகைப்படங்கள் போல இருந்தது.

இந்த புகைப்படத்தின் மூலம் மனிதர்களின் வீடான பூமி அண்டத்தை ஒப்பிடும் போது எவ்வளவு சிறிய பங்கை வகிக்கிறது என்பதை தெளிவுப்படுத்துகிறது.

ஆர்ட்டெமிஸ் பூமியிலிருந்து அதிக தொலைவு பயணம் மேற்கொண்ட முதல் வின்கலம். ஆர்ட்டெமிஸ் வாகனம் இதுவரை நாசாவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா ஓரியன் மிஷன் குழு இதுவரை 124 முக்கிய நோக்கங்களில் 31 ஐ மட்டுமே முடித்திருந்தாலும், மீதமுள்ள முக்கிய நோக்கங்களாக பாதி செயல்பாட்டில் பூமிக்குத் திரும்புவதாக அமைந்துள்ளது.

ஓரியன் டிசம்பர் 11 ஆம் தேதி சான் டியாகோ கடற்கரையில் தரையிரங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டம் பல தாமதங்களைச் கடந்து விண்ணில் ஏவப்பட்டது, 2025 அல்லது 2026 வரை சந்திரனில் மனிதர்களை தரையிறக்கும் திட்டமில்லை.

இருப்பினும், ஆர்ட்டெமிஸ் இன் தற்போதைய செயல்திறன் விண்வெளி நிறுவனத்தின் முயற்சிகள் இறுதியாக பயனளித்துள்ளதாக அறிவித்தது