என்.ஜி.பி கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் அமைப்புக் கூட்டம்

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக, பெற்றோர் – ஆசிரியர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

வணிகவியல் சாரந்த பன்னிரண்டு துறைகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ – மாணவியர்களின் பெற்றோர்கள் 300 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் ஒழுக்கம், முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள், கல்லூரி வளர்ச்சிக்கான கருத்துக்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் போன்றவை குறித்து பெற்றோர்கள் ஆலோசனைகளை கூட்டத்தில் வழங்கினர்.

டாக்டர் என்.ஜி‌.பி கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் பெற்றோர் – ஆசிரியர் அமைப்புக் கூட்டம் குறித்தும், அதன் செயல்பாடுகள், அமைப்பின் நிலைப்பாடுகள், அதன் பங்களிப்புகள் குறித்தும் பேசினார்.