கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா

கோவையில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையின் சார்பில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை ஆர்வலரான ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வானம் வசப்படும் என்கிற தலைப்பில் உரையாற்றினார். இளைய சமுதாயம் தன்னம்பிக்கை பெறவும், வாழ்வில் மேம்படவும் நிகழ்ச்சியில் பேசினார். ஆங்கிலம் என்பது மொழியே தவிர அறிவோ, வாழ்க்கையோ இல்லை எனக் கூறி ஆங்கில மொழி மீதான புரிதலை விளக்கியும் பேசினார். மேலும் தமிழ் இலக்கியங்களில் இயற்கையின் சிறப்பை விளக்கி கூறியும், தமிழ்மொழி மீதான பற்றையும், அவசியத்தையும் உணர்த்தும் விதமாகவும் சிறப்புரை ஆற்றினார்.