கலைமகள் கல்லூரியில் கணினி துறை மன்ற துவக்க விழா

கோவை கலைமகள் கலை அறிவியல் கணிதம் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையின் சார்பாக மன்றத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மாலா இதில் கலந்து கொண்டார் இந்த விழாவில் நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினித் துறை உதவி பேராசிரியர் சகாய சுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆராய்ச்சியின் செயல்பாடுகள என்றா தலைப்பில் சிறப்புரையாற்றினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கணிதத்தின் முக்கியத்துவம் பற்றியும், செயல்பட்டு ஆராய்ச்சியின் முக்கியத்துவம் பற்றியும் தகுந்த எடுத்துகட்டுகளுடன் எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.