ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு துரிதமாக செயல்பட்டு உதவிய சைபர் கிரைம்

கோவை மாவட்டத்தில் வடவள்ளி, பொள்ளாச்சி, சூலூர் மற்றும் அன்னூர் பகுதியை சேர்ந்த, ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்த நபர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 374 பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு திரும்ப பெற்றுக் கொடுத்தனர்.

துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார்.

ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.