பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டு மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து, நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு மற்றும் பொருளாதார பிரிவு சார்பில், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள், புதிய துணிகள், மளிகை பொருட்கள் , மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிவாரணமாக அளிக்கும் வகையில் லாரிகள் மூலமாக குறிச்சி பகுதியில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு , மாவட்ட செயலாளர் தன்ராஜ் மற்றும் பொருளாதார பிரிவு மாவட்ட செயலளார் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் வசந்த் கொடி அசைத்து வாகனத்தை அனுப்பி வைத்தார்.