கோவையில் ராஜஸ்தான் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில்  ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள  ராஜஸ்தானி சங்கத்தில் , ரக்‌ஷா பந்தன் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றது . கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கமும் , பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 150 துப்புரவு பணியாளர்களுக்கு, ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டது . மழை காலங்களில் பணிபுரியும் , துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு கருதி , இந்த ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் , ஒவ்வொருவருக்கும் ராக்கி கயிறுகளை கட்டினர் . ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர் . இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி ஶ்ரீனிவாசன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு ராக்கி கட்டினார் . இந்த நிகழ்வில் ராஜஸ்தானி சங்கத்தினர், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்