தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியில் கோவை பெடல்ஸ் அணி வெற்றி

சைக்கிளிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், அண்ணாநகர் சைக்கிள்ஸ் மற்றும் பிராண்ட் பிளிட்ஸ் இணைந்து தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) முதல் சீசனின் இறுதிப்போட்டியை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடத்தியது. இதில் கோவை பெடல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நிப்பான் பெய்ன்ட் இந்தியா நிறுவனத்தின் அசோக் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பையுடன் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கினார்.