கோவையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் விமான நிலையம் செல்லும் வழியில், ஏலூர் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் உள்ளிட்ட 3 பேர் விபத்தில் சிக்கியதை கவனித்தார்.

உடனே தனது பாதுகாப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

உடன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.