கே.ஐ.டி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் (கே.ஐ.டி) பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான துறை சார்பாக முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. “பொறியாளர்களின் எதிர்காலத்தை தயார்படுத்துதல் – தொழில் வழிகாட்டுதல் மற்றும் மாணவர்கள் தொடர்புகள்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக புனே டாடா மோட்டார்ஸ் திறமை மேம்பாடு பொது மேலாளர் ரெங்கா ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு பேசுகையில்: மாணவ, மாணவியர்களிடம் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, உலோக 3D அச்சிடுதல், வாகன மின்னணு சென்சார் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் துறையில் 50 க்கும் மேற்ப்பட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு பொறியியல் துறை எவ்வாறு உதவுகிறது என்றும் இன்றைய காலகட்டத்தில் பொறியியல் துறையின் அசாதாரண வளர்ச்சியைப் பற்றியும் கூறினார்.

அதுமட்டுமின்றி பொறியியல் துறையில் உள்ள கட்டமைப்புகளை மாணவர்கள் புரிந்து கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், டீன்-கல்வி & ஆராய்ச்சி ராமசாமி, டீன்-வேலைவாய்ப்புத் துறைத்தலைவர் மகாலட்சுமி, அறிவியல் மற்றும் மனிதநேயம் துறைத்தலைவர் யமுனா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.