கோவையில் சிக்னல்கள் முறையாக இயங்க நடவடிக்கை – ஆட்சியர் அறிவுறுத்தல்

போக்குவரத்து சிக்னல்கள் சரியான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை பாதுகாப்பு கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சமீரன் தலைமையில்  நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைப் பாதுகாப்பு தொடா்பாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு தொடா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறையினா் சாலைகளில் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடை, பாதசாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கைப் பலகைகள் ஆகியவை அமைக்க வேண்டும்.

போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் கூட்டங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் இயக்கப்படும் வாகனங்களால்தான் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனை உணா்ந்து வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதை தவிா்க்க வேண்டும். தவிர இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் அசோக்குமாா், மதிவாணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சௌமியா ஆனந்த், பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் பிரியங்கா உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.