சிறு குறு தொழில்களுக்கு முதலீடு பெறுவது குறித்த கருத்தரங்கு

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு பெறுவது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த சிறு குறு தொழில்கள் ஆலோசகர் அஜய் தாக்கூர் இதில் பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு வரவேற்று பேசினார். துணைத் தலைவர்கள் முன்னிலை வைத்தனர்.

நிகழ்ச்சியில் மும்பை பிஎஸ்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய் தாக்கூர், ஹலானி நிறுவனத்தின் அதிகாரி அசோக் ஹலானி பங்கேற்று பேசினார்.

அஜய் தாக்கூர் பேசும்போது: தொழில்துறையில் முதலீடு என்பது முக்கியமான பங்கு. அவற்றை தெளிவாக தொழில்துறையினர் திட்டமிட வேண்டும். செலவினங்களை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் போது லாபம் ஈட்டலாம். முதலீடு லாபங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது வங்கியாளர்களின் நம்பிக்கையை பெற முடியும். தரமான உற்பத்திக்கு திட்டமிட வேண்டும்.

வர்த்தக சபை செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன், வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை, கொடிசியா, சைமா அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும்
கோவை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் தொழில் நிறுவனத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள் திரளாக பங்கேற்றனர்.