கோவை, திருப்பூரில் கோடக் மஹிந்திரா வங்கியின் புதிய கிளை துவக்கம்

கோவை மற்றும் திருப்பூரில் கோடக் மஹிந்திரா வங்கியின் புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது.

கோவை அவினாசி ரோடு, காளப்பட்டியில் உள்ள நிவாசன் பிளாசா (பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில்) கோடக் மஹிந்திரா வங்கியின் 11 வது கிளை திறக்கப்பட்டுள்ளது.

இதனை கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் தவமணி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

கௌரவ விருந்தினர்களாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, கோவை எஸ்.எம். கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான சதிஷ்குமார் நாயர் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் மண்டல வர்த்தக மேலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் திருப்பூரில் தனது 3 வது கிளையை, திருப்பூர் காங்கயம் ரோடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி எதிரில் துவக்கியுள்ளது. இந்த கிளையை திருப்பூர், பாப்பீஸ் நிட்வேர் நிறுவனத்தின் தலைவர் சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கிவைத்தார். இதில் கோடக் மஹிந்திரா வங்கியின் மண்டல வர்த்தக மேலாளர் சிவகுமார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.