அமிர்த வித்யாலயம் பள்ளியில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி

திருப்பூர் அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளியில் 43வது கோயம்புத்தூர் சஹோதயா பெண்கள் கைப்பந்து போட்டி சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இப்போட்டியின் தொடக்க விழாவில் சுவாமி காட்டன் மில்ஸின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும், திருப்பூர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜான்சன் தலைமை விருந்தினராகவும் கலந்துகொண்டு புறாவை பறக்கவிட்டு போட்டியை துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் 22 பள்ளிகளில் இருந்து 39 அணிகள் கிட்டத்தட்ட 470 பெண்கள் பங்கேற்றனர். மேலும், போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் தலைவர் மோகன்ராம் பரிசுகளை வழங்கினார்.