என்.ஜி.பி கல்லூரி சார்பில் ரத்த தான முகாம்

டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப், நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப், கோயம்புத்தூர் மெரிடியன் ரோட்டரி சங்கம், ஒண்டிப்புதூர் லயனஸ் கிளப் ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாமை நடத்தியது.

கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன், கோவை மாவட்ட அரிமா சங்கத் தலைவர் கஸ்தூரி சண்முகம் ஆகியோர் ரத்த தான முகாமினைத் துவக்கி வைத்தனர். இம்முகாமில் 201 மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.