கே.ஐ.டி கல்லூரியில் கருத்தரங்கு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) மின்னியல் மின்னணுவியல் துறை மற்றும் மின்னணுவியல் தொலைத் தொடர்பியல் துறை இணைந்து “அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு அமைப்பு – பொறியியல் 5ஜி”, “மின்சார வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் – பொறியியல் 5ஜி” என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சி.எ.டி.எஃப்,இ,எம் இந்தியவின் அகாடமிக் ப்ரோக்ராம் மேனேஜர் வினய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், இவ்விழாவில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், கல்லூரியின் டீன்கள் ராமசாமி, சுரேஷ் மற்றும் பல துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.