ஜி.வி.நினைவு சொற்பொழிவு

கோவையின் முன்னணி மருத்துவமனையான பி.எஸ்.ஜி மருத்துவமனையை (PSGIMSR) தொடங்கியவரும், பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக 13 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த (1978 – 1990) ஜி.வரதராஜ் அவர்களின் பிறந்த தினம் (நவம்பர் 1) இன்று. இவர் கோவையை சேர்ந்த பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த நாளில் நினைவு சொற்பொழிவு நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

ஜி.வரதராஜ்

இந்நிலையில், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘ஜி.வி.நினைவு சொற்பொழிவு’ மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ‘பாரதீய பண்பாடு’ என்ற தலைப்பில் மதுரை ஸ்ரீ க்ரிஷ்ண ஜெகந்நாதன் சிறப்புரை ஆற்றினார்.

இதில் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன், புற்றுநோய் மையத்தின் இயக்குனர் பாலாஜி, பி.எஸ்.ஜி பார்மசி கல்லூரியின் முதல்வர் ராமநாதன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.