சங்கரா கல்லூரியில் விவாத நிகழ்ச்சி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் “பணமில்லா பொருளாதாரம் – வரமா? ஆபத்தா?” என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்க்கு கல்லூரியின் முதல்வர் ராதிகா, துணை முதல்வர், வணிகவியல் துறைத் தலைவர் ஆகியோர் அறிமுக உரையாற்றினார்கள். இந்நிகழ்விற்க்கு கோவை பி.ஆர். அகாடமியின் பட்டய கணக்காளர் நிறுவனர் ராஜா கலந்துகொண்டு “பணமில்லா பொருளாதாரம்  – வரமா?  அல்லது ஆபத்தா? ” என்ற தலைப்பில் விவாதத்தை நடத்தினார். இந்த விவாதத்தின் மூலம் மாணவர்கள் டிஜிட்டல் சொல், டிஜிட்டல் பணம் செலுத்துதல், நேரத்தை மிச்சப்படுத்துதல், கொள்ளையடித்தல், காகிதப்பணிகளைக் குறைத்தல் மற்றும் பாரம்பரிய கட்டண முறைகள் பற்றிய ஆழமான அறிவைப் பெற்றனர்.