சி.எம்.எஸ் கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்க விழா

சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தமிழ் மன்றம் ‘சிகரம்’ துவக்க விழா நடைபெற்றது. சி.எம்.எஸ் கல்லூரியின் முதல்வர் பாலகிருஷணன் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்புவிருந்தினர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ் இலக்கியங்களின் பெருமையை எடுத்துரைத்தார். மேலும் தமிழின் சிறப்பை உணர்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜகோபாலன் தலைமையுரை வழங்கினார். துணைத் தலைவர் அசோக், செயலாளர் வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.