ஆர்.வி. கல்லூரியில் சர்வதேச உணவு தினம்

காரமடை, டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச உணவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். பசி பட்டினி ஒழிந்து மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உணவுப் பொட்டலங்கள் மற்றும் பல்வேறு வகையான பாக்கெட் வகை உணவுகளை கொண்டு வந்தனர்.

பின்பு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு உள்ள நோயாளிகள் மற்றும் அவர்கள் உடன் இருக்கக்கூடிய உறவினர்களுக்கு அந்த உணவுகளை பகிர்ந்து வழங்கினர்.