ஜி.ஆர்.ஜி கல்விக் குழுமத்தின் சார்பில் நவராத்திரி இசைவிழா கொண்டாட்டம்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி கல்விக் குழுமத்தின் சார்பாக நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜி.ஆர்.ஜி மெலோடீஸ் என்ற இசைக் கச்சேரியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டு விழா இசை கச்சேரி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கென தனிப்பாடலும், குழுப்பாடல்களை மேடையில் பாடி அசத்தினர்.

கர்நாடக இசையை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வளர்க்கும் விதமாக ஜிஆர்ஜி நிறுவனங்களில் கொலு வைத்தனர். மேலும் 75 வது சுதந்திர தின வருடத்தை மையமாக வைத்து கொலு அமைந்தது.

மேலும், இது போன்ற விழாக்களை ஆண்டுதோறும் நிகழ்த்தி இசைக்கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அரங்கேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தும், அவர்களை ஊக்குவித்து வருவதாக ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் நந்தினி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.