வேளாண்மைப் பல்கலையில் நாளை விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஐசிஏஆர்-கரும்பு இனப்பெருக்க நிலையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து, நடத்தும் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (அக்டோபர் 14) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகள் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

அம்மன் கே அர்ஜுன் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து விவசாயிகளுடன் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நடைபெறும்.