என்.ஜி.பி கல்லூரியில் ரத்ததான முகாம்

டாக்டர்.என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ரெட் ரிப்பன் கிளப், தேசிய சேவை திட்டம் & யூத் ரெட் கிராஸ் ஆகியவை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் பிரபா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெற்றனர். 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். மேலும், ரத்த தானம் செய்வதற்கு மருத்துவ ரீதியாக தகுதியுடைய தன்னார்வலர்களிடமிருந்து 94 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இறுதியாக நன்கொடையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.